நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

தென்னிந்திய திரையுலகையே சமீபத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் என்றால் அது பிரபல நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி அத்துமீறிய சம்பவம்தான். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க கோரியும் மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகமும் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கேரள தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மார்ட்டின், வடிவால் சலீம், பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது பலாத்காரம், ஆள்கடத்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் மணிகண்டன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள போலீஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் பல முக்கிய புள்ளிகள் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளதாகவும், அவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

More News

பாவனா கடத்தலுக்கு பிரபல நடிகர் காரணமா?

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தின் விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது...

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

தேசிய அளவிலான பளூதூக்கும் போட்டியில் தமிழ் நடிகை

விளையாட்டு துறையில் சாதனை படைத்த சடகோபன் ரமேஷ், ரித்திகாசிங் போன்ற பலர் சினிமா துறையில் நுழைந்தது போல், சினிமாத்துறையில் உள்ள ஒரு நடிகை விளையாட்டு துறைக்கு சென்றுள்ளார்...

மீண்டும் இணைந்த சிம்பு-அனிருத்

பல்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவராகிய சிம்பு, சமீபத்தில் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

நடிகர் சங்கத்தின் கோரிக்கைக்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் சில மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகை மட்டுமின்றி கோலிவுட் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...